கடைசி போட்டியில் இந்தியா - நியூசி. அணிகள் நாளை மோதல் : பிருத்வி ஷாக்கு வாய்ப்பு கிடைக்குமா? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு
Jan 31 2023 3:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது டி20 போட்டி, நாளை நடைபெறுகிறது. அகமதாபாத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இதனால், கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள தொடக்க ஆட்டக்கார் பிருத்வி ஷாக்கு, கடைசி போட்டியில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.