20 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான மல்யுத்த போட்டி : 22 மாவட்டங்களை சேர்ந்த 230 பேர் பங்கேற்பு
Mar 12 2023 6:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த காவேரி கிராசில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான மல்யுத்த போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில், நடைபெற்ற இப்போட்டியில், 22 மாவட்டங்களை சேர்ந்த 230 பேர் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஆண்களுக்கு 20 பிரிவுகள் பெண்களுக்கு 10 பிரிவுகள் என 30 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.