பிப்ரவரி மாதத்திற்கான ஐ.சி.சி. வீரர் விருது - இங்கிலாந்தின் ஹேரி ப்ரூக் தேர்வு
Mar 13 2023 6:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிப்ரவரி மாதத்திற்கான ஐ.சி.சி. வீரருக்கான விருதை இங்கிலாந்தின் ஹேரி ப்ரூக் தட்டி சென்றார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய ஹேரி ப்ரூக், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் வீரர் குடகேஷ் மோட்டி ஆகியோரை பின்னுக்கு தள்ளி விருதுக்கு தேர்வானார். அதே போல் மகளிர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்ட்னரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது விருதை வென்றதன் மூலம் இரண்டு முறை விருது வென்ற பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசமுடன் ஹேரி ப்ரூக் இணைந்துள்ளார்.