சென்னையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி - ஆன்லைன் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதாக அறிவிப்பு
Mar 14 2023 7:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் நடக்கும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் அனைத்து விற்று தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3-வது ஒருநாள் போட்டி வரும் 22-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. இதில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாக கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் 18-ந்தேதி சேப்பாக்கத்தில் உள்ள கவுண்ட்டரில் நேரடி டிக்கெட் விற்பனை காலை 11 மணிக்கு தொடங்குகிறது. கவுண்ட்டரில் ஆயிரத்து 200 விலைக்கான டிக்கெட் மட்டும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.