"சச்சினின் அந்த வார்தைகள் தன்னை தாக்கின.." : சச்சின் உடனான சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ள சக்லைன் முஷ்டாக்
Mar 16 2023 2:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட்டில் 100-வது சதம் விளாசியதன் 12வது ஆண்டு தினத்தை இன்று கொண்டாடுகிறார். இந்த தருணத்தில், தனக்கும் சச்சின் டெண்டுல்கருக்கும் இடையே நிகழ்ந்த சம்பவத்தை பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சக்லைன் முஷ்டாக், தனியார் யூடியூப் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், கனடாவில் நடைபெற்ற சகாரா கோப்பை போட்டியின் போது சச்சின் அருகே சென்று சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி அவரை ஸ்லெட்ஜிங் செய்ததாகக் கூறினார். ஆனால் தான் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக சச்சின் டெண்டுல்கர் தன்னிடம் வந்து, சாகிப் உன்னிடம் இதை எதிர்பார்க்கவில்லை என்றும் நீங்கள் ஒழுக்கமான நபர் என தான் நினைத்தாகவும் கூறியதை நினைவு கூர்ந்துள்ளார். சச்சினின் அந்த வார்த்தைகள் தன்னை தாக்கியதாகவும் சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.