செங்கல்பட்டு வண்டலூரில் ஐந்தாவது தேசிய இன்டர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம் : இன்டர் விளையாட்டுப் போட்டிகளில் 1,200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
Mar 16 2023 4:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில், ஐந்தாவது தேசிய இன்டர் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட்டன. இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் ஐஐஐடி காஞ்சிபுரம் மற்றும் கர்ணூல் இணைந்து நடத்தும் இந்தப் போட்டியை, தாம்பரம் காவல் ஆணையர் டாக்டர் அமுல்ராஜ் தொடங்கி வைத்து, விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தடகளம், பூப்பந்து, கூடைப்பந்து டேபிள் டென்னிஸ், கேரம் உள்ளிட்ட 13 விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்