உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் : ரூ.300 கோடியில் மைதானம் அமைக்கப்படவுள்ளதாக தகவல்
Mar 17 2023 3:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 300 கோடி ரூபாய் செலவில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்ஜாரி என்ற பகுதியில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில் தேர்வான இடத்தை பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா, துணை தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானம், லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தை தொடர்ந்து 3வதாக வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளதாகவும், விரைவில் மைதானம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.