கார் விபத்தில் சிக்கிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட்டை நேரில் சந்தித்து நலம் விசாரித்த யுவராஜ் சிங்
Mar 18 2023 1:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட்டை, முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நேரில் சந்தித்துள்ளார். கடந்த டிசம்பர் 30ம் தேதி கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், பல அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர் தற்போது ஓய்வெடுத்து வருகிறார். தற்போது உடல்நிலை தேறிவரும் அவரை, யுவராஜ் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அப்போது, இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள யுவராஜ் சிங், இந்த சாம்பியன் மீண்டும் எழப்போகிறார் என பதிவிட்டுள்ளார். எப்போதும் நேர்மறை மற்றும் வேடிக்கையான ஒருவன், நன்றாக கேட்ச் பிடிக்கக் கூடியவன் என்றும் ரிஷப்பண்ட்டை யுவராஜ்சிங் புகழ்ந்துள்ளார்.