ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது போட்டியில் 234 பந்துகள் மீதம் இருந்த நிலையில் தோல்வி... ஒருநாள் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான சாதனையை பதிவு செய்த இந்திய அணி
Mar 20 2023 7:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் படுதோல்வியடைந்ததன் மூலம், இந்திய அணி மிக மோசமான சாதனையை படைத்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, மிட்சர் ஸ்டார்க்கின் மிரட்டலான பந்துவீச்சால் 117 ரன்களுக்கு சுருண்டது. பின்னர், 118 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 66 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம், சர்வதேச ஒருநாள் போட்டி வரலாற்றில் 234 பந்துகள் மீதம் இருந்த நிலையில் தோல்வியை சந்தித்த அணி என்ற மிக மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.