இந்திய தேசியக் கொடியை தனது தொடையில் வைத்து ஆட்டோகிராஃப் போட்ட பாகிஸ்தான் வீரர் சாகித் அஃபிரிடி செயலுக்கு வலுக்கும் கண்டனங்கள்
Mar 20 2023 3:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கத்தார் நாட்டின் தோஹாவில் நடந்த டி20 கிரிக்கெட் போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி இந்திய தேசியகொடியில் கையெழுத்திட்ட சம்பவம் பேசு பொருளாகியுள்ளது. ஷாஹிதித்திடம் கையெழுத்து கேட்டு ரசிகர் ஒருவர் இந்திய தேசிய கொடியை நீட்டியுள்ளார். அப்போது ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தனது தொடையில் வைத்து இந்திய நாட்டின் தேசிய கொடியில் கையெழுத்திட்டு ரசிகரிடம் ஷாஹித் அப்ரிடி அளித்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளஙகளில் வைரலான நிலையில், ஷாஹித் அப்ரிடியின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.