இந்தியா- ஆஸ்திரேலியா இடையே நாளை 3வது ஒருநாள்போட்டி : தொடரை கைப்பற்றும் முனைப்பில் 2 அணி வீரர்கள் பயிற்சி
Mar 21 2023 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இரு அணி வீரர்களும் சென்னை வந்தனர். ஏற்கெனவே நடைபெற்ற 2 போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ள நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏசி சிதம்பரம் மைதானத்தில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி துவங்குகிறது. தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.