பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லல்வினா, சாக்ஷி கால்இறுதிக்கு தகுதி : 5க்கு0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்திய வீராங்கனைகள் அசத்தல்
Mar 21 2023 4:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இரண்டு இந்திய வீராங்கனைகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். டெல்லியில் நடைபெற்று வரும் 13-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், 52 கிலோ எடைப்பிரிவின் 2-வது சுற்றில், இந்திய வீராங்கனை சாக்ஷி, கஜகஸ்தானின் ஜாஜிரா ரக்பாயேவாவை, 5க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோற்கடித்தார். அதனையடுத்து 75 கிலோ எடைப்பிரிவின் 2-வது சுற்றில், இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் 5க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தாய்ல்லாந்தின் ஜிட்பாங்க் ஜூடாமஸ்சை தோற்கடித்து, இருவரும் கால்இறுதிக்குள் நுழைந்தனர்.