2023 ஐ.பி.எல் போட்டிகளில் ட்ரோன்கள் பறக்க ஏற்பாடு : சென்னை சூப்பர் கிங்ஸ் - கருடா ஏரோஸ்பேஸ் இடையே ஒப்பந்தம்
Mar 23 2023 2:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ட்ரோன்களை உற்பத்தி செய்யும் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் 2023ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஓப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தங்களது ட்ரோன் நிறுவனம் முதல் முறையாக கிரிக்கெட் அணி ஒன்றுடன் கூட்டு சேர்ந்துள்ளதை பெருமையாக கருதுவதாக கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான அக்னீஸ்வர் ஜெயப்பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் பங்குபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் மைதானத்தில் பறக்கும் பந்துகளை துல்லியமாக படம் பிடிக்கும் வகையில் ட்ரோன் கேமிராக்கள் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.