ரிஷப் பண்ட்டை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் - பீனிக்ஸ் பறவை போல எப்போதும் உயர பறக்க வாழ்த்துக்கள் என சுரேஷ் ரெய்னா இன்ஸ்டாவில் பதிவு
Mar 27 2023 9:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட்டை, முன்னாள் வீரர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட், தற்போது அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில், முன்னாள் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் ஆகியோர் ரிஷப் பண்ட்டை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இதுகுறித்து ரெய்னா பகிர்ந்துள்ள இன்ஸ்டா பதிவில், "பீனிக்ஸ் பறவை போல எப்போதும் உயர பறக்க வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.