மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 4 தங்கப் பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் - இறுதிநாளில் நிகாத் ஜரீன், லவ்லினா ஆகியோர் தங்கம் வென்று அசத்தல்
Mar 27 2023 10:09AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 4 தங்கப் பதக்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. டெல்லியில் கடந்த 15ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இத்தொடர், நேற்றுடன் நிறைவடைந்தது. இறுதிநாளில் நடைபெற்ற 50 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில், இந்தியாவின் நிகாத் ஜரீன், வியட்நாமின் நிகுயேன் தி டாமை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
இதேபோன்று 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், ஆஸ்திரேலிய வீராங்கனை காட்லின் பார்க்கரை 5-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். இத்தொடரில், இந்தியா வெல்லும் 4வது தங்கப் பதக்கம் இதுவாகும். இதன்மூலம், பதக்கப்பட்டியலிலும் இந்தியா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.