"அற்புதமான சாதனை மற்றும் தங்கம் வென்றதற்காக வாழ்த்துக்கள்" - தங்க வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து
Mar 27 2023 10:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் லவ்லினா போர்கோஹைன் மற்றும் நிகத் ஜரீன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் பிரதமர் மோடி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் அற்புதமான சாதனை மற்றும் தங்கம் வென்றதற்காக வாழ்த்துக்கள் என பெருமிதம் தெரிவித்தார். மேலும், தங்களின் வெற்றி பல சந்தர்ப்பங்களில் இந்தியாவை பெருமைப்படுத்துவதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.