மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் தொடர்... இந்தியாவின் பிவி சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
May 25 2023 10:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். கோலாலம்பூரில் மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றை பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 21க்கு 13, 17க்கு 21, 21க்கு 18 என்ற புள்ளிக் கணக்கில் டென்மார்க்கின் லின் கிறிஸ்டோபர்சென்னை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் டின் சென் சோவை 16க்கு 21, 21க்கு 14, 21க்கு 13 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், டாமா ஜூனியர் போபோவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.