ஆகாஷ் மத்வாலை தேர்வு செய்தது ஏன் என கேப்டன் ரோகித் ஷர்மா விளக்கம் : லக்னோ அணிக்கு எதிராக ஆகாஷ் மத்வாலின் ஆட்டத்தால் மும்பை அணி வெற்றி
May 25 2023 2:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு பதில் ஆகாஷ் மத்வாலை தேர்வு செய்தது ஏன் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார். எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஆகாஷ் மத்வாலும் ஒருவர். மத்வால், 3 புள்ளி 3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோகித் ஷர்மா, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆகாஷ் மத்வாலின் முன்னேற்றத்தை கவனித்து வருவதாக கூறினார். கடந்த ஆண்டு துணைப் பந்துவீச்சாளராக இருந்த ஆகாஷ், ஜோஃப்ரா இல்லாத நேரத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டதா ரோகித் ஷர்மா தெரிவித்தார்.