ப்ளே ஆப் சுற்றில் வீரர்கள் அரை சதம் அடிக்காமல் அதிக ரன்கள் எடுத்த அணி : முதல்முறையாக 182 ரன்கள் குவித்து மும்பை இந்தியன்ஸ் அணி சாதனை
May 25 2023 3:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐபிஎல் ப்ளே ஆப் சுற்றில் எந்த வீரரும் அரை சதம் அடிக்காமல் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றிருக்கிறது. லக்னோ அணிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட அரை சதம் அடிக்கவில்லை. இருப்பினும் அந்த அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் எந்த ஒரு வீரரும் அரை சதம் அடிக்காமல் இவ்வளவு அதிக ரன்கள் குவிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும். இதற்கு முன்னர் 2018ம் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிராக ஹைதராபாத் 7 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.