ஆசியக் கோப்பை குறித்த முடிவுகள் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு பின்னர் அறிவிக்கப்படும் : பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல்
May 25 2023 6:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆசியக் கோப்பை குறித்த முடிவுகள் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தவுள்ளது. இந்த போட்டிகளில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் நிலையில், இந்திய அணியை அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து வருகிறது. அரசியல் ரீதியான காரணங்களால் அனுமதி மறுக்கப்படுவதாக, இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆசியக்கோப்பையை நாடு அல்லது நாடுகள் குறித்த முடிவுகள், நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.