ஸ்பெயினில் கால்பந்தாட்ட வீரரின் உருவ பொம்மையை தொங்கவிட்டதாக புகார் : இனவெறியை தூண்டியதாக கைது செய்யப்பட்ட 4 பேர் விடுவிப்பு
May 26 2023 2:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்பெயினில் கால்பந்தாட்ட வீரர் வினீசியஸ் ஜூனியரின் உருவ பொம்மையை தொங்கவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டிலுள்ள நெடுஞ்சாலைப் பாலத்தில் ரியல் மட்ரிட் கால்பந்து அணி ஆட்டக்காரர் வினிசியஸ் ஜூனியரின் உருவ பொம்மை தொங்கவிட்டப்பட்டது. வெலன்சியா அணிக்கு எதிரான ஸ்பானிய லீக் ஆட்டத்தின்போது இனவெறியை தூண்டும் வகையில் வினீசியஸ் ஜூனியரின் கறுப்பு நிற உருவ பொம்மையுடன் "Madrid hates Real" என்ற வசனம் இருந்த பதாகையும் தொங்கவிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக 4 பேரை ஸ்பெயின் போலீசார் கைது செய்தனர்.