மதீஷா பத்திரனாவைப் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை : பத்திரனாவின் குடும்பத்தை சந்தித்து பேசிய தோனி கூறிய தகவல்
May 26 2023 3:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பத்திரனா தன்னுடன் இருப்பதால், அவரைப் பற்றி கவலைப்பட தேவையில்லை என்று தோனி சொன்னதாக பத்திரனாவின் சகோதரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக இருப்பவர் மதீஷா பத்திரனா. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடந்த முதல் குவாலிஃபையர் போட்டியில் பத்திரனா 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி 28 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இந்த நிலையில், நேற்று பத்திரனாவின் குடும்பத்தினரை தோனி சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பத்திரனாவின் சகோதரி, விஷூகா பத்திரனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், மதீஷாவைப் பற்றி நீங்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை. அவன் எப்போதும் என்னுடன் இருக்கிறான் என்று தோனி கூறியதாக விஷூகா குறிப்பிட்டுள்ளார்.