பத்திரனாவை இந்திய அணியில் விளையாட வைக்க இளம்பெண் ஆர்வம் : இந்திய குடியுரிமை பெற திருமணம் செய்து கொள்வதாக விருப்பம்
May 26 2023 3:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பத்திரனாவை இந்திய அணியில் விளையாட வைப்பதற்காக இளம் பெண் ஒருவர் அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவரது ஆட்டத்தால் ஈர்க்கப்பட்ட இளம்பெண் ரோஹினி ஸ்ரீதரன் என்பவர், பத்திரனாவை தன்னை போன்ற ஒரு இந்திய பெண் திருமணம் செய்து கொண்டால், அவர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்துவிடலாம் என்றும், அவருக்கு இந்திய குடியுரிமை கிடைத்துவிட்டால், இந்திய அணியில் விளையாடலாம் என்றும் யோசனை கூறியுள்ளார்.