ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடும் 5 பேட்ஸ்மேன்களை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தேர்வு
May 27 2023 3:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடும் 5 பேட்ஸ்மேன்களை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தேர்வு செய்துள்ளார். அவரது தேர்வில் அதிரடி ஆட்டக்காரர்கள் விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோர் இடம்பெறவில்லை. முதலாவதாக கடைசி ஓவரில் 5 சிக்சர்களை அடித்து அணியை வெற்றி பெறச் செய்த ரிங்கு சிங்கை தேர்வு செய்துள்ளார். இரண்டாவதாக 33 சிக்சர்களை அடித்துள்ள சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷிவம் துபேவை தேர்வு செய்துள்ளார். மூன்றாவதாக ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலையும், 4வதாக சூர்யகுமார் யாதவையும் தேர்வு செய்துள்ளார். இறுதியாக ஐதரபாத் அணியின் க்ளாசென்னை தேர்வு செய்துள்ள சேவாக், இந்தியாவில் சுழற்பந்து வீச்சை திறம்பட ஆடும் வெளிநாட்டு வீரர் என்று புகழ்ந்துள்ளார்.