மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் - அரையிறுதியில் பி.வி.சிந்து தோல்வி : இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பிரனாய் முன்னேற்றம்
May 28 2023 12:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் அரையிறுச்சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார். கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில், நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் பிவி சிந்து, இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்கை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 14க்கு 21 , 17க்கு 21 என்ற புள்ளி கணக்கில் பி.வி. சிந்து தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
அதேநேரம், ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் பிரனாய், இந்தோனேஷியா வீரர் கிறிஸ்டியன் அடினாடாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.