ஐபிஎல் பட்டத்தை வென்ற பிறகு உணர்ச்சிவசப்பட்ட அம்பதி ராயுடு : வெற்றிக்கு பிறகு மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் வைரல்
May 31 2023 3:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
5-ஆவது ஐபிஎல் பட்டத்தை வென்ற பிறகு உணர்ச்சிவசப்பட்ட அம்பதி ராயுடு கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் வெளியாகி உள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை கடைசிப்பந்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்தப்போட்டிக்கு சற்று முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அம்பதி ராயுடு ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்தநிலையில் தனது கடைசிப் போட்டியில் விளையாடி வெற்றி பெற்றதால் அம்பதி ராயுடு கண்ணீர் விட்டு மைதானத்தில் அழுத காட்சிகள் வெளியாகி உள்ளது.