சென்னையில் கைப்பந்து வீரர்களுக்கான 39வது இலவச கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு : 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்
May 31 2023 7:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை எழும்பூரில் நடைபெற்று வந்த கைப்பந்து வீரர்களுக்கான 39வது இலவச கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவடைந்தது. நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கைப்பந்து கிளப் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் கைப்பந்து வீரர்களுக்கு இலவச பயிற்சி முகாம் நடத்தி வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 39வது இலவச கோடைக்கால பயிற்சி முகாம் எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் நடைபெற்று வந்தது. சுமார் ஒரு மாதம் நடைபெற்ற இலவச கோடைக்கால பயிற்சி முகாமில் ஆண்கள் பெண்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். நிறைவு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மகேந்திரன், தமிழ்நாடு கைப்பந்து சங்க வாழ்நாள் தலைவர் அர்ஜுன் துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.