இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : ஜார்கண்டில் இன்று தொடக்கம் - சமநிலையில் உள்ள இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு
Mar 16 2017 10:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஜார்கண்ட்டில் இன்று தொடங்குகிறது. ராஞ்சியில் முதல்முறையாக நடைபெறும் இப்போட்டியில், இந்தியா வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 4 டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. புனேயில் நடந்த முதல் டெஸ்டில், ஆஸ்திரேலியா 333 ரன் வித்தியாசத்திலும், பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 75 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதனால், தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று காலை தொடங்குகிறது. இந்தப் போட்டியில், கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றியை தொடரும் முனைப்பில் களமிறங்குகிறது. ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை, ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியிருப்பது சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ராஞ்சியில் நடைபெறும் முதல் சர்வதேச டெஸ்ட் என்ற சிறப்புடன் தொடங்கும் இப்போட்டியில், இந்தியா வெற்றிபெற்று முத்திரை பதிக்கும் என எதிபார்க்கப்படுகிறது. அதேவேளையில், வெற்றிக்காக ஆஸ்திரேலியாவும் கடுமையாகப் போராடும் என்பதால், இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.