சத்தீஸ்கரில் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்திற்கு பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவல் 6 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார்
Mar 18 2017 9:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் உள்ள பேஜா என்ற பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் 12 வீரர்கள் உயிரிழந்தனர். 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பங்களுக்கு 6 லட்சம் நிதி உதவி வழங்குவதாக பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் அறிவித்துள்ளார். அவர் வழங்கும் நிதி உதவி 12 வீரர்களின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரமாக பகிர்ந்து வழங்கப்பட உள்ளது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஏற்கனவே, நடிகர் அக்ஷய் குமார் ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் நிதிஉதவி அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.