ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அலைச்சறுக்கு போட்டி - சீறி எழுந்த அலைகளில் லாவகமாக சறுக்கி, திறனை வெளிப்படுத்திய முன்னணி வீரர்கள்
Mar 18 2017 9:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவில் அலைச்சறுக்கு சாம்பியன் போட்டி தொடங்கியுள்ளது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் தங்கக்கடற்கரையில் அலைச்சறுக்கு சாம்பியன் போட்டி நேற்று தொடங்கியது. வரும் 25-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில், நடப்பு உலகச் சாம்பியன் ஜான் ப்ளாரன்ஸ் உட்பட 34 வீரர்களும், 17 வீராங்கனைகளும் கலந்து கொண்டுள்ளனர். பல்வேறு சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. 3 முதல் 5 அடி வரை அலைகள் ஆக்ரோஷமாய் எழும்பிய போதிலும், வீரர்கள் லாவகமாக அதனை கடந்து அலைச்சறுக்கில் ஈடுபட்டனர். பலகையின் மீது நின்று, சீறும் அலைகளில் முன்னேறி நகர்ந்து சென்றதை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். இறுதிச்சுற்று போட்டிகள் வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது. அலைச்சறுக்கு போட்டிகளை காண ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் ஆர்வத்துடன் வருகை தந்துள்ளனர்.