நெல்லையில் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி : தென்மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்பு
Mar 19 2017 12:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லையில் நடைபெற்று வரும் மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்றுள்ளன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் போட்டிகளின் முடிவில், நெல்லை மாவட்ட அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது.
மறைந்த மாண்புமிகு அம்மாவின் 69-வது பிறந்தநாளையொட்டி கடலுர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆடவர் மற்றும் மகளிருக்கான கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது. லீக் போட்டியில், வேல்ஸ் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள, பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில், 52-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டனர். விளையாட்டுப் போட்டிகளில் முதுகலை இந்தியப் பண்பாட்டுத்துறை மற்றும் முதுகலை வரலாற்றுத்துறை மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.