தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் : ஏராளமான வீரர் - வீராங்கனைகள் பங்கேற்பு
Mar 20 2017 11:14AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் ஏராளமான வீரர் - வீராங்கVனகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மண்டல அளவிலான ஆண்களுக்கான சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் அதிக வெற்றிகளுடன் முதலிடம் பிடித்த நெல்லை மாவட்ட அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. சிவகங்கை மாவட்ட அணி இரண்டாவது இடத்தை பிடித்தது.
இதனிடையே, தூத்துக்குடியில் நடைபெற்ற தென் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 8 மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெறும் வீரர்கள், வரும் ஜூன் மாதன் மதுரையில் நடைபெறும் அகில இந்திய அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
திருச்சியில் பள்ளி, கல்லுரி மாணவ - மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டது. ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில், அம்மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.