ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது
Mar 20 2017 6:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா அணி, முதல் இன்னிங்சில் 451 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி, 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக புஜாரா 202 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, நேற்றைய ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. போட்டியின் கடைசி நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள், இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பரிகொடுத்தனர். பின்னர் களம் இறங்கியஆஸ்திரேலிய வீரர்கள் Marsh-ம், handscomb-ம் தோல்வியை தவிர்க்க நிதாமாக விளையாடியனர். இந்திய பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய வீரர்களின் விக்கெட்டுகளை எடுக்க கடுமையாக போராடியும் பலன் கிடைக்கவில்லை. முடிவில் போட்டி யாருக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் இருஅணிகளும் சமநிலையில் உள்ளன. 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி இமாச்சல பிரதேச மாநிலம் Dharamsala-வில் தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.