இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி : மகளிர் பிரிவு இறுதியாட்டத்தில் ரஷ்யாவின் எலினா வெஸ்னினா, சகநாட்டு வீராங்கனை குஸ்நெட்சோவாவை தோற்கடித்து சாம்பியன்
Mar 20 2017 12:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் நடைபெற்ற இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவு இறுதியாட்டத்தில், ரஷ்யாவின் எலினா வெஸ்னினா, சகநாட்டு வீராங்கனை குஸ்நெட்சோவாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்தியன் வெல்ஸில், BNP Paribas ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டி, இந்திய நேரப்படி இன்று நடைபெற்றது. இதில்,
மகளிர் ஒற்றையர் இறுதியாட்டத்தில், தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் எலினா வெஸ்னினா, இருமுறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சகநாட்டு வீராங்கனை குஸ்நெட்சோவாவை எதிர்கொண்டார். இத்தொடரின் இறுதிப்போட்டியில் முதல்முறையாக விளையாடிய வெஸ்னினா, முதல் செட்டை 6-7 என்ற கணக்கில் இழந்து ஏமாற்றம் அளித்தார். எனினும், நம்பிக்கையுடன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்னினா, 7-5, 6-4 என்ற கணக்கில் அடுத்த இரு செட்களையும் வென்று குஸ்நெட்சோவாவுக்கு அதிர்ச்சியளித்தார். 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த போட்டியின் முடிவில், 6-7, 7-5, 6-4 என்ற செட்கணக்கில் வெஸ்னினா போராடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
தனது டென்னிஸ் வாழ்வில் வெஸ்னினா வெல்லும் மிகப்பெரிய சாம்பியன் பட்டம் இதுவாகும். இதன்மூலம், WTA தரவரிசையில் 13-வது இடத்திற்கு அவர் முன்னேறுவது உறுதியாகியுள்ளது.