உலக கடற்கரை கபடிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்று தாயகம் திரும்பிய தமிழக வீராங்கனை அந்தோணியம்மாளுக்கு விழுப்புரத்தில் உற்சாக வரவேற்பு
Mar 22 2017 4:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக கடற்கரை கபடிப் போட்டி மொரீஷியஸ் தீவில் நடைபெற்றது. மகளிர் பிரிவு இறுதியாட்டத்தில், இங்கிலாந்து அணியை 25-க்கு 56 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்று தங்கப் பதக்கம் வென்றது. இப்போட்டியில் இந்திய அணி சார்பில், தமிழக வீராங்கனை அந்தோணியம்மாள் பங்கேற்றார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சோழபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த அவருக்கு, சிறந்த வீராங்கனை என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில், தாயகம் திரும்பிய அந்தோணியம்மாளுக்கு, அவரது சொந்த ஊரான விழுப்புரம் வந்தடைந்தபோது, உறவினர்கள், பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விளையாட்டு வீரர்களை ஊக்குவித்த மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவுக்கு தங்கப் பதக்கத்தை அர்ப்பணிப்பதாக அந்தோணியம்மாள் குறிப்பிட்டார்.