கோவையில், தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடங்கியது : 16 அணிகள் பங்கேற்பு
Mar 22 2017 6:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவையில், தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடங்கியுள்ளது. இதில், 16 அணிகள் கலந்துகொண்டுள்ளன.
31-வது ஃபெடரேஷன் கோப்பைக்கான ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பங்கேற்கும் தேசிய சாம்பியன் கூடைப்பந்து போட்டிகள் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று தொடங்கியது. வரும் 26-ம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில், 16 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகளாக நடத்தப்படும் போட்டிகளில், தமிழகம், கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்படுகின்றன.