இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 4-வது டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம் - இரு அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சி
Mar 24 2017 9:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி ஹிமாச்சலபிரதேசம், தர்மசாலாவில் நாளை தொடங்க உள்ள நிலையில், இரு அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்டீவன் ஸ்மித்0 தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. புனேயில் நடந்த முதல் டெஸ்டில் 333 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும், பெங்களூரில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 75 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்று இருந்தன. ராஞ்சியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. இதனால் இந்தத் தொடர் 1க்கு 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹிமாச்சலபிரதேச மாநிலம் தரம்சாலாவில் நாளை தொடங்குகிறது. பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்போட்டியில் யார் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றுவார்கள் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் தர்மசாலாவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.