Deodhar டிராபி கிரிக்கெட் தொடர் : காயம் காரணமாக இந்திய அணி வீரர்கள் ரோஹித் சர்மா, கேதர் ஜாதவ் ஆகியோர் தொடரில் இருந்து வெளியேறினர்
Mar 24 2017 10:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
Deodhar டிராபி கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் ரோஹித் சர்மா, கேதர் ஜாதவ் ஆகியோர் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.
தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, Deodhar டிராபி தொடரில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்தியா ப்ளூ அணிக்காக விளையாடவிருந்த ரோஹித் சர்மா, காயம் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளார். முழங்காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு ஓய்வு தேவை என பி.சி.சி.ஐ. மருத்துவர் குழு பரிந்துரைத்ததை அடுத்து, அணியிலிருந்து ரோஹித் சர்மா வெளியேற்றப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
இதேபோல், வயிறு தொடர்பான பிரச்னையால் அவதிப்பட்டு வரும் கேதர் ஜாதவும், இந்தியா ரெட் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக இந்தியா ப்ளூ அணியில் மஹாராஷ்டிவிராவின் ருத்துராஜ் கெய்க்வாடும், ஜாதவுக்கு பதிலாக இந்தியா ரெட் அணியில் ஹைதராபாத்தின் சி.வி. மிலிந்தும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்கவுள்ள Deodhar டிராபி தொடரின் முதல் போட்டியில், இந்தியா ரெட் - இந்தியா ப்ளூ அணிகள் மோதுகின்றன.