திருச்சியில் நடைபெற்று வரும் மாவட்ட அளவிலான மகளிர் பூப்பந்தாட்ட போட்டியில் கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
Mar 27 2017 8:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர் ஐவர் பூப்பந்தாட்டப்போட்டி இன்று தொடங்கியுள்ளது. நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டியின் இன்றைய ஆட்டத்தில் துவாகுடி அரசு கல்லூரி அணி, ஈ.வே.ரா கல்லூரி அணியை 15க்கு 9, 15 க்கு 12 என்ற செட்கணக்கில் வீழ்த்தியது. இறுதிப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்குபரிசுகள் வழங்கப்பட உள்ளன. இதில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து 16 அணிகள் கலந்து கொண்டன.