புதுச்சேரியில் தென்னிந்திய சீனியர் கைப்பந்து போட்டி : 6 மாநிலங்களைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு
Apr 25 2017 10:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் தென்னிந்திய சீனியர் கைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதில் 6 மாநிலங்களைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
புதுச்சேரி மாநில கைப்பந்து கழகத்தின் சார்பில், 5 நாட்கள் நடைபெறும் தென்னிந்திய சீனியர் கைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. உப்பளம், இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள ராஜீவ் காந்தி உள் விளையாட்டு அரங்கில் தொடங்கிய இப்போட்டியில், புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட 6 மாநிலங்களைச் சேர்ந்த ஆண், பெண் என மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. துவக்க ஆட்டத்தில் ஆண்கள் பிரிவில் புதுச்சேரி மற்றும் ஆந்திர அணிகளும், பெண்கள் பிரிவில் புதுச்சேரி மற்றும் கர்நாடக அணிகளும் மோதின. வரும் 28ம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.