ஆசிய கிராண்ட் ஃப்ரீ தடகளப் போட்டி - மகளிருக்கான குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர், புதிய தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அபாரம்
Apr 25 2017 3:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் நடைபெற்ற ஆசிய கிராண்ட் ஃப்ரீ தடகளப் போட்டிகளில், மகளிருக்கான குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர், புதிய தேசிய சாதனை படைத்ததுடன், தங்கப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.
சீனாவின் Jinhua நகரில் முதல் சுற்று ஆசிய கிராண்ட் ஃப்ரீ தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மகளிருக்கான குண்டு எறிதல் போட்டியில், இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர், 18 புள்ளி எட்டு ஆறு மீட்டர் தூரம் வீசி, புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கமும் வென்றார். 2015-ம் ஆண்டில் மன்பிரீத் கவுர், 17 புள்ளி ஒன்பது ஆறு மீட்டர் வீசியதே தேசிய சாதனையாக இருந்தது. இதனை, தற்போது அவரே முறியடித்துள்ளார். இப்போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், வரும் ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் மன்பிரீத் கவுர் தகுதி பெற்றுள்ளார். ஒருநாள் மட்டுமே நடைபெற்ற இந்த கிராண்ட் பீரி தடகளப் போட்டிகளின் முடிவில், இந்தியா ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்தது.