புனே அணிக்கு எதிரான போட்டியில், நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒழுங்கீனமாக நடந்து ரோஹித் சர்மாவுக்கு 50 சதவீதம் அபராதம் விதிப்பு
Apr 25 2017 6:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புனே அணிக்கு எதிரான போட்டியில், நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு, போட்டியின் ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி, 3 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணியிடம் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் 161 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு பேட்டிங் செய்த மும்பை அணி, கடைசி 4 பந்தில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. அப்போது பந்துவீசிய புனே அணியின் Unadkat, 3-வது பந்தை ஸ்டெம்ப்ஸ்க்கு சற்று வெளியே வீசினார். இதனை Wide என நினைத்து, ரோஹித் சர்மா எதிர்கொள்ளாமல் விட்டுவிட, நடுவரோ, அது சரியான பந்து என அறிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த ரோஹித் சர்மா, களத்தில் இருந்த நடுவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இது நடத்தை விதிமுறையை மீறிய செயல் என்பதால், இதுதொடர்பாக, போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத், ரோஹித் சர்மாவிடம் விசாரணை நடத்தினார். அப்போது தனது தவறை ரோஹித் சர்மா ஒப்புக் கொண்டதை அடுத்து, அவருக்கு போட்டியின் ஊதியத்தில் 50 சதவீதம் அபாரதம் விதிக்கப்பட்டது.