தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நாகர்கோவிலில் தொடங்கியது : ஏராளமான மாணவ-மாணவியர் பங்கேற்பு
Apr 26 2017 9:03AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தொடங்கியுள்ளது. இதில் ஏராளமான மாணவ-மாணவியர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில், கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் தொடங்கி உள்ளது. இதில் ஓட்டப்பந்தயம், பளு தூக்குதல், நீளம்தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தடகளம் சார்ந்த விளையாட்டுகளுக்கும், கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 21ம்தேதி முதல் அடுத்த மாதம் 15ம் தேதி வரை இந்த பயிற்சி முகாம் நடைபெறும் என மண்டல விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். இதில் ஏராளமான மாணவ-மாணவியர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.