தேசிய ஜூனியர் கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற தமிழக அணி - வீரர்களுக்கு, திருச்சியில் உற்சாக வரவேற்பு
Apr 27 2017 2:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய ஜூனியர் கைப்பந்து போட்டியில் மகளிர் பிரிவில் முதலிடத்தையும், ஆடவர் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பிடித்த தமிழக அணிக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அகில இந்திய கைப்பந்து சம்மேளனம் சார்பில், 43-வது தேசிய அளவிலான ஜூனியர் கைப்பந்து போட்டி, கேரள மாநிலம் எர்ணாகுளம் அடுத்த பரவூர் பகுதியில் கடந்த 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து ஆடவர் பிரிவில் 25 அணிகளும், மகளிர் பிரிவில் 23 அணிகளும் பங்கேற்றன. மகளிர் இறுதிப்போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றது. ஆடவர் பிரிவு இறுதிப்போட்டியில் ராஜஸ்தானிடம் தோல்வியடைந்த தமிழக அணி 2-ம் இடம் பிடித்தது. இந்நிலையில், வெற்றிக்கோப்பையுடன் திருச்சி வந்தடைந்த வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட கைப்பந்து சம்மேளனம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.