கமுதி அருகே கோயில் திருவிழாவையொட்டி வெகு உற்சாகமாக நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயம் : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
Apr 28 2017 1:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கமுதி அருகே கோயில் திருவிழாவையொட்டி, மாட்டுவண்டிப் பந்தயம் வெகு உற்சாகமாக நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கோவிலாங்குளத்தில் இருளப்பசாமி கோயில் திருவிழாவையொட்டி, மாட்டு வண்டிப்பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது. மாட்டுவண்டிப்பந்தயம் கோவிலாங்குளத்தில் இருந்து கமுதி வரை 18 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது. மாட்டு வண்டிப்பந்தயங்களில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 22 மாட்டு வண்டிகளுடன் பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்பட்டது.