கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கியுள்ள மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி : 200-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்பு
Apr 29 2017 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கியுள்ள மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில், 200-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நாகர்கோவிலில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், 27 மாவட்டங்களைச் சேர்ந்த 257 மாணவ - மாணவிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். போட்டியில் மாணவிகள் நிகழ்த்தி காட்டிய சிலம்பாட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.