ஸ்டட்கார்ட் கிராண்ட் பிரி டென்னிஸ் போட்டி - அரையிறுதியில் மரியா ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி
Apr 30 2017 3:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊக்க மருந்து விவகாரத்தில் தடை நீங்கி மீண்டும் ஸ்டட்கார்ட் கிராண்ட் பிரி டென்னிஸ் போட்டியில் களம் இறங்கிய மரியா ஷரபோவா, அரையிறுதியில் கிறிஸ்டினாவிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.
ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஸ்டட்கார்ட் கிராண்ட் பிரி டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில், ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா மற்றும் பிரான்ஸ் வீராங்கனை கிறிஸ்டினா ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தின், தொடக்கத்தில் மரியா ஷரபோவா ஆதிக்கம் செலுத்தி 3-6 என்று செட்டை கைப்பற்றினார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட கிறிஸ்டினா, ஆக்ரோஷமாக விளையாடி 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால், ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் தடை நீங்கி மீண்டும் போட்டியில் களம் இறங்கிய சரபோவா ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். இதையடுத்து, இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில், ஜெர்மன் வீராங்கனை Laura Siegemund-வுடன், கிறிஸ்டினா மோத உள்ளார்.