சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் - நியூசிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா
Apr 30 2017 5:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில், இந்திய அணி, 3-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்தது.
26-வது ஆண்டு சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கித் தொடர், மலேசியாவின் இப்போ நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்து, ஜப்பான், பிரிட்டன் ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. தொடரின் 2-வது நாளான இன்று, இந்திய அணி, தனது 2-வது போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இப்போட்டியின் தொடக்கம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, முதல் பாதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து, 2-வது பாதி ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, மேலும் ஒரு கோல் அடித்து நியூசிலாந்துக்கு அதிர்ச்சியளித்தது. இறுதிவரை போராடியும் நியூசலாந்து அணியால் கோல் எதுவும் அடிக்க இயலாததால், இந்தியா 3-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் இரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம், தொடரில் முதல் வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது.