லண்டனில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி லீக் அரையிறுதி போட்டியில் இந்தியா வெற்றி 7 - 1 என கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை - ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
Jun 19 2017 9:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லண்டனில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி லீக் அரையிறுதி தொடரில் இந்தியா 7க்கு 1 என கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.
உலக ஹாக்கி லீக் அரையிறுதி தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. அயர்லாந்து, கனடாவை வீழ்த்திய இந்தியா, நேற்று பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இந்த போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியா 7க்கு1 என்ற கோல்கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் வீரர் ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல்களும், தல்விந்தர் சிங் 2 கோல்களும், ஆகாஷ் தீப் இரண்டு கோல்களும், பிரதீப் மோர் ஒரு கோலும் அடித்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் மொகமது உமர் பூட்டா ஒரு கோலும் அடித்தார்.
இந்தியா வெற்றி பெற்றதை ஹாக்கி வீரர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். உலக ஹாக்கி லீக் இறுதிப்போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என பிரார்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய அரையிறுதியில் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து, இந்திய ஹாக்கி வீரர் Manjeet Kaur-ன் தாயார் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இந்த வெற்றி குறித்து பெருமைப்படுவதாகவும், அடுத்த போட்டியிலும் இந்தியா வெற்றிபெற பிரார்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.