தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி : திருச்சி மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு
Jun 19 2017 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கு திருச்சி மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு அங்கு நடைபெற்று வருகிறது.
16 வயது உட்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி விரைவில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்காக, அந்தந்த மாவட்டங்களில் அணிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. திருச்சி மாவட்ட அணியை தேர்வு செய்ய அம்மாவட்ட கிரிக்கெட் சங்க மைதானத்தில் அதற்கான தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. இதில், ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். பேட்டிங், பந்துவீச்சு, விக்கெட் கீப்பிங் போன்ற பல்வேறு பிரிவுகளில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இன்று நடைபெறும் முதற்கட்ட தேர்வில் 48 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களில் இறுதியா 20 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
14 வயதிற்குட்பட்டோர், 19 வயதிற்குட்பட்டோர் மற்றும் 23 வயதிற்குட்பட்டோருக்கான வீரர்கள் தேர்வும் இன்று நடைபெறுகிறது. பிற்பகலில் தொடங்கி நாளை வரை இந்த தேர்வு நடைபெறும்.